சனி, 7 நவம்பர், 2009

மழை தொடரும் நாட்களில்

மழை தொடரும் நாட்களில் ( நினைவிற்காக)
நாயகம்(ஸல்) அவர்கள் கற்றுத்தந்த பிரார்த்தனைகள்

காற்று புயல் வீசுகின்ற போது

அல்லாஹும்ம இன்னீ அஸ் அலுக கைரஹா,
வ அஊது பிக மின் ஷர்ரிஹா.

யா அல்லாஹ் நிச்சயமாக அதன் நன்மையை உன்னிடம் நான் கேட்கிறேன்.
அதன் தீமையிலிருந்தும் உன்னைக்கொண்டு நான் காவல் தேடுகிறேன்.
நூல்கள் : அபூதாவுது, இப்னுமாஜா

இடி இடிக்கின்ற போது

ஸுப்ஹானல்லதீ யுஸப்பிஹுர் ர;.து பிஹம்திஹி
வல் மலாயிகத்து மின் கீ;.பதிஹி

அவன் தூயவன் அவன் எத்தகையவனென்றால்
அவனின் புகழைக் கொண்டு இடி துதிக்கிறது.
மற்றும் மலக்குகள் அவனது பயத்தால் துதிக்கின்றனர்.
நூல் ; முஅத்தா.




மழை பெய்து விடும்போது

அல்லாஹும்ம ஸய்யிபன் நா;.பிஅன்

பயன் தரக்கூடிய மழையாக யாஅல்லாஹ் நீ ஆக்கி வைப்பாயாக!
நூல்; புகாரி

மழை பெய்த பிறகு

முதிர்னா பி ;.பளில்லாஹி வரஹ்மதிஹி

அல்லாஹ்வின் பேரருள் மற்றும் அவனது அருளால்
நாங்கள் மழை பெற்றோம்.
நூல் ; புகாரி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக