ஞாயிறு, 25 அக்டோபர், 2009

திங்கள், 19 அக்டோபர், 2009

அய்யாமுல் ஜாஹிலிய்யா?!



அய்யாமுல் ஜாஹிலிய்யா என்று நாம்
இஸ்லாமிய வரலாற்றில் படித்திருக்கிறோம்.
இதை பாருங்கள்.
இந்த காலத்திலும் இப்படியா?
என ஆச்சர்யபடுவீர்கள்?!


சனி, 17 அக்டோபர், 2009

ஏர்வாடி

ஏர்வாடி தர்ஹாவில்
மன நோயாளிகளின் நிலை


உங்கள் சிந்தனைக்கு!

இன்று நமது சமுதாயம்
அல்லாஹ் மட்டும் வணங்காமல்
தனக்கு ஒரு கஷ்டங்கள் வந்தால்
தனக்கு ஒரு நோய் வந்தால்
உடனே நேர்ச்சைகள் பலவாறு செய்து
பல ஊர்களுக்கு பிரயாணம் செய்து
பல தர்ஹாக்களிள் வேண்டுவதை பார்க்கிறோம்.
இது போல கஷ்டங்கள்
வந்தால் நாம் பொறுமையைத்தான் கடை பிடிக்க வேண்டும்
என நமக்கு நமது இஸ்லாம் போதிக்கிறது.

(இறை நம்பிக்கையாளர்களே!)
உங்களை ஓரளவு பயத்தாலும் பசியாலும், பொருட்கள்,
உயிர்கள், கனிவர்க்கங்கள் ஆகியவற்றின் இழப்பாலும்
நிச்சயமாக சோதிப்போம். ஆனால், பொறுமையுடையோருக்கு
( நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக. (அல் குர் ஆன் 2;155)

ஒரு முஸ்லிமை வந்தடையும் கஷ்டம், நோய், கவலை, நோவினை,
துக்கம், அவரது காலில் குத்திவிடும் முள்ளின் வேதனை வரை,
அவை அனைத்தையும் கொண்டு அவரது பிழைகளை அல்லாஹ்
அழிக்காமல் விடுவதில்லை.
அறிவிப்பாளர் ; அபூஹுரைரா (ரலி)
நூல் புகாரி

வெள்ளி, 16 அக்டோபர், 2009

ஓதுவோம் வாருங்கள்

அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித்தந்த
நற்செயல்களைச் செய்யும்போது
ஏராளனமான நன்மைகளை அல்லாஹ்
பரிசாக வழங்குகின்றான். திருக்குர் ஆனை
ஓதுபவருக்கு அல்லாஹ் அள்ளி வழங்கும்
நன்மைகளை பார்க்கலாம்.

'உங்களில் ஒருவர் அதிகாலையில் பள்ளிக்குச்சென்று மகத்துவமும் கண்ணியமும்
நிறைந்த அல்லாஹ்வின் வேதத்திலிருந்து இரண்டு வசனங்களை ஓதவோ அல்லது
விளங்கவோ கூடாதா? அவ்வாறு சென்று இரண்டு வசனங்களை ஓதுவது
இரு பெண் ஒட்டகங்களை விடவும் சிறந்தது. மூன்று வசனங்கள் மூன்று
பெண் ஒட்டகங்களை விடச்சிறந்தது. நான்கு வசனங்கள் நான்கு ஒட்டகங்களை
விடச்சிறந்தது. இந்த அளவுக்கு வசனங்கள் இதே அளவுக்கு ஆண் ஒட்டகங்களை
விடச் சிறந்தது என்று சொன்னார்கள்.'

அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர்(ரலி)
நூல் : முஸ்லிம்
( நீண்ட நபிமொழியின் சுருக்கம்)

ஓதுபவருக்கு உவமை
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

குர் ஆனை ஒதுகின்ற( நல்ல)வரின் நிலையானது எலுமிச்சை போன்றதாகும்.
அதன் சுவையும் நன்று! வாசனையும் நன்று! ( நல்லவராக இருந்து) குர் ஆன்
ஓதாமல் இருப்பவர் பேரீச்சம்பழத்தை போன்றவராவார். அதன் சுவை நன்று அதற்கு வாசனை கிடையாது. தீயவனாக இருந்து கொண்டு குர் ஆனை ஓதிவருகின்றவனின் நிலை
துளசிச்செடியின் நிலையை ஒத்திருக்கின்றது. அதன் வாசனை நன்று, சுவையோ கசப்பு!
தீமையும் செய்து கொண்டு குர் ஆனையும் ஓதாமல் இருப்பவனின் நிலை
குமட்டிக்காயின் நிலையை ஒத்திருக்கின்றது. அதன் சுவையும் கசப்பு,
அதற்கு வாசனையும் கிடையாது.

அறிவிப்பவர் : அபுமூஸல் அஷ் அரீ (ரலி)
நூல் : புகாரி (5020)

மலக்குகளுடன் சஞ்சரிப்பவர்

' குர் ஆனை நன்கு மனனம் செய்து தங்கு தடையின்றி சரளமாக ஓதுபவர்
இறைவனுக்கு கட்டுப்பட்ட கண்ணியமிக்க வானவத்தூதர்களுடன் இருக்கின்றார்.
சிரமம் மேற்கொண்டு தட்டுத்தடுமாறி ஓதுபவருக்கு இரு கூலிகள் இருக்கின்றன
என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.'

அறிவிப்பவர் : ஆய்ஷா (ரலி)
நூலகள் : முஸ்லிம் , திர்மிதி

பொறாமைப்படுதல்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரண்டு விசயங்களைத் தவிர வேற எதற்காகவும் பொறாமை கொள்ளக்கூடாது.


1) ஒரு மனிதனுக்கு அல்லாஹ் வேத ஞானத்தை வழங்கியுள்ளான். அதனை அவர்
இரவு நேரங்களில் ஓதி வழிபடுகின்றார்.
2)இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தை அளித்துள்ளான். அவர்
அதனை இரவு, பகல் எல்லா நேரங்களிலும் தானம் செய்கின்றார்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர்(ரலி)
நூல் : புகாரி (5025)

எழுத்துக்கு பத்து நன்மை

அல்லாஹ்வின் வேதத்திலிருந்து ஒரு எழுத்தை ஓதுபவருக்கு
ஒரு நன்மை உண்டு! ஒரு நன்மை பத்து நன்மைகளை போன்றதாகும்.
அலிப், லாம், மீம்- என்பதை ஓர் எழுத்து என்று சொல்லமாட்டேன். மாறாக,
அலிப் ஒரு எழுத்து , லாம் ஓரெழுத்து, மீம் ஓரெழுத்து என்று தான் கூறுவேன்
என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ் ஊத் (ரலி)
நூல் : திர்மிதி
'அல்லாஹ்வுடைய வீடுகளில் ஒரு வீட்டில் மக்கள் கூடி
அல்லாஹ்வுடைய வேதத்தை ஓதி தங்களுக்கு மத்தியில்
அதை ஓதிக்காட்டி, பாடம் படிக்கும் போது அமைதி
அவர்கள் மீது இறங்காமல் இருக்காது, அவர்களை
அருள் அரவணைத்துக் கொள்கின்றது. மலக்குகள்
அவர்களை சூழ்ந்து விடுகின்றனர். குர் ஆன் ஓதும்
அவர்களை அல்லாஹ் தன்னிடம் உள்ள மலக்குகளிடம்
நினைவு கூர்கின்றான். என அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் கூறினார்கள்.'

அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி)
நூல் : முஸ்லிம்

இந்தச் செய்திகளின் அடிப்படையில்
குர் ஆனை அதிகமதிகம் ஓதி
நன்மையை அடைவோமாக!

திங்கள், 12 அக்டோபர், 2009

ஓதிப் பார்க்கலாமா?

இறை இல்லங்களுக்கு பிறசமயத்தை சார்ந்தவர்கள்
தேடிவரும் போது அவர்களிடம் இஸ்லாத்தை சொல்லாமல்
ஓதிப்பார்க்கிறேன் என வைத்தியம் பார்க்கும்
ஹஸரத்கள், மோதினார்கள்..
இதோ காட்சிக்காக ஒரு புகைப்படம்

'மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது.
அதை செவிதாழ்த்தி கேளுங்கள்! அல்லாஹ்வையன்றி நீங்கள்
யாரை அழைக்கீறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும்
ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. ஈ அவர்களிடமிருந்து எதையேனும்
பறித்துக்கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்க முடியாது.
தேடுவோனும் தேடப்படுவோனும் பலவீனமாக இருக்கிறார்கள்.' (அல்குர்ஆன் 22:73)

வெள்ளி, 9 அக்டோபர், 2009

கப்ர் ஜியாரத்

இன்றும் பல ஊர்களில் இருந்தும்
பிரயாணம் செய்து தக்கலைக்கு வரும் இஸ்லாமியர்கள்



இதோ ஜியாரத் செய்யும் காட்சி நேரலையாக ?!!

இறைவன் தரும் படிப்பினை ?!




'பூமியில் சுற்றித் திரிந்து (உங்களுக்கு) முன்னிருந்தவர்களின்
முடிவு என்ன ஆயிற்று என்பதை நீங்கள் கவனித்துப் பாருங்கள்?
அவர்களில் பெரும்பாலோர் முஷ்ரிக்குகளாக (இனை வைப்பவர்களாக)
இருந்தனர்' என்று ( நபியே!) நீர் கூறும். <அர் ரூம்:42.>

இறைவன் தரும் படிப்பினை







திங்கள், 5 அக்டோபர், 2009

தர்ஹா வழிப்பாட்டை தரைமட்டமாக்குவோம்

தர்ஹா வழிப்பாட்டை தரைமட்டமாக்குவோம்



பீமா பள்ளி கேரளா