வியாழன், 28 அக்டோபர், 2010

விஜயதசமி

சமீபத்தில் பத்திரிகையில் படித்த ஒரு செய்தி
(சரஸ்வதி பூஜை) விஜயதசமி தினத்தில்
குழந்தைகளுக்கு பள்ளியில் சேர்க்கை நடைபெறும்.
அதுபோல குடந்தையில் உள்ள ஒரு பள்ளியில்
ஒரு தாயார் தனது குழந்தையை சேர்க்கும்போது
எடுத்த புகைப்படம் பார்த்தேன்..
ஆனால் அதில் இருந்தது இஸ்லாமிய பெண்
தனது குழந்தைக்கு நெல்லில் 'அ' போட பழகிய படி?
என்ன ஒரு வேதனை...
இன்னும் இந்த சமூகம் இப்படி இருக்கிறது?
அருகாமையில் உள்ள நமது சகோதரர்கள்
அந்த பெண்ணுக்கு நல்ல புத்தி சொல்வார்களா?

வெள்ளி, 22 அக்டோபர், 2010

அழகிய ஒரு துஆ

'அல்லாஹும்ம! இன்னீ அஊது பிக்க மின் ஸவாலி
நி;.மத்திக்க, வதஹவ்வுலி ஆ;.பியத்திக்க,
வ ;.புஜாஅத்தி நிக்மத்திக்க வ ஜமீஇ சகத்திக்க'

அப்துல்லாஹ் பின் உமர்(ரலி)
முஸ்லிம் 5289

இறைவா! உன் அருட்கொடை என்னை விட்டு நீங்குவதில் இருந்தும்,
நீ வழங்கிய நன்மைகள் என்னை விட்டு மாறிவிடுவதில் இருந்தும்,
திடீரென உனது தண்டனை வருவதில் இருந்தும்,
உனது கோபத்திற்குரிய அனைத்தில் இருந்தும்
உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் பிரார்த்தித்து வந்தார்கள்.