ஞாயிறு, 25 ஏப்ரல், 2010

சேத்தியா தோப்பு

தஞ்சை பகுதியில் இருந்து சென்னை விமான நிலையம் செல்லும்
அனைவருக்கும் ஒரு சந்திப்பு , உணவு, தேனீர் மற்றும் இதர தேவைகளுக்கு,
அது போல தகவல் தொடர்புக்கும் நமது மக்கள் சொல்வது, நாங்க இப்போ தான்
சேத்தியா தோப்பு தான்டி வருகிறோம் என...

அந்த சேத்தியா தோப்பிலே
இந்த வாரம் வெள்ளிக்கிழமை ஜும்மா கிடைத்தது.
சென்னை விமான நிலையம் செல்லும்போது
அங்கே தொழுகை நிறைவேற்ற சென்றோம்.
சரியாக ஒரு மணிக்கு குத்பா உரை துவங்கியது
சுமார் 20 நிமிடங்கள் உரையாற்றினார்.
என்ன சொன்னார் என யாருக்கும் காதில் விழவில்லை.
காரனம், குத்பா உரையின் போது இமாம் மைக் உபயோகபடுத்தவில்லை.
அதற்கு அடுத்து ஒரு புத்தகம் எடுத்து வாசித்தார்.
அப்போது தான் மைக் ஆன் செய்தார்.

பின்னர் தொழுகை நடந்தது.
வெள்ளிக்கிழமை குத்பா உரை என்றால்
பள்ளிக்கு வரும் மக்களுக்கு நல்ல சுபச்செய்திகள்,
இஸ்லாமிய சட்டங்கள், அண்ணலாரின் பொன்மொழிகள்,
வாழ்க்கை வரலாறுகள் என எத்தனையோ விசயங்கள்,
அழகாக , ஆணித்தரமாக, எடுத்துச் சொல்லாமல்,
இப்படி மக்களை தூங்க வைக்கும் குத்பா உரையால் என்ன பயன்?
இது போல சொற்பொழிவு இருந்தால் அந்த பகுதியில்
இஸ்லாமிய நடைமுறைகள் எப்படி வரும்?
இஸ்லாம் எப்படி செழித்தோங்கும்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக