புதன், 20 ஜனவரி, 2010

கொடிய நோய்களிலிருந்து.....

இறையின் பெயரால்..

பன்றிக்காய்ச்சல் போன்ற கொடிய நோய்களிலிருந்து பாதுகாவல் பெற
நாயகம்(ஸல்)கற்றுத்தந்த பிரார்த்தனை

நபி(ஸல்)அவர்கள்
'அல்லாஹும்ம இன்னீ அவூது பிக மினல் பரஸி,
வல் ஜூனுனி வல் ஜூ;.தாமி வஸய்யி இல் அஸ்காமி'
என்று கூறுவார்கள்.

அறிவிப்பாளர் ; அனஸ் (ரழி)அவர்கள்
நூல் ; அபுதாவுத்

'யா அல்லாஹ் தொழு நோய், கருங்குஷ்டம், பைத்தியம் மற்றும்
கொடும் நோய்களை விட்டும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்'.

சனி, 16 ஜனவரி, 2010

கிரகணத்தை கண்டால்

நபி(ஸல்)காலத்தில் சூரியகிரகணம் ஏற்பட்டபோது
அழைப்பாளர் ஒருவரை அனுப்பி "அஸ்ஸலாது ஜாமி ஆ"
என்று மக்களை அழைக்குமாறு நபி(ஸல்)கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அப்துல்லா இப்னு அம்ரு
நூல்: முஸ்லிம்

'நீங்கள் கிரகணத்தை கண்டால்
அல்லாஹ்விடம் துவா செய்யுங்கள்
கிரகணம் விலகும் வரை தொழுங்கள்
என்று நபி(ஸல்)கூறினார்கள்.'
அறிவிப்பவர்: முகீரா இப்னு ஷு;.பா(ரலி)
நூல்: புகாரீ