வெள்ளி, 13 நவம்பர், 2009

குர்பானி சிறப்பும் செய்முறைகளும்

அல்லாஹ்விடத்தில் கண்ணியத்தையும், சிறப்பையும் பெற்ற,
தியாகச் செம்மல் இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்களின்
தியாகத்தை நினைத்துப் பார்த்து நாமும் படைத்த இறைவனுக்காக
ஆடு, மாடு, ஒட்டகங்களை அறுத்து அல்லாஹ்விற்கு அர்பணித்து
ஏழை எளியவர்களுக்கு கொடுத்து மகிழும் மகத்தான ஒரு வழிபாடுதான் குர்பானி.
இறையச்சம் ஒன்றை மட்டுமே இலட்சியமாக கொண்டு செயல்படும் வழிபாடகும்.

"குர்பானியின் மாமிசமோ, அவற்றின் இரத்தமோ அல்லாஹ்வை அடைவதில்லை.
எனினும் உங்களின் இறையச்சமே அவனை அடைகிறது. (அல்குர் ஆன் 22;37)"

*குர்பானி ஹஜ்ஜுப் பெருனாள் தொழுகை தொழுத பின்னர்தான் கொடுக்கப்படவேண்டும்
*குர்பானி கொடுக்க நாடியவர் துல்ஹஜ்ஜூ மாதத்தின் ஆரம்ப நாள் முதல்
குர்பானி கொடுக்கும் வரை நகம் ,முடி, எதையும் களையக்கூடாது.
*குர்பானி பிராணி நல்ல கொழுத்ததாகவும், குறையில்லாததாகவும் இருக்கவேண்டும்.
*குர்பானி கொடுக்கும் பிராணி கொம்புடையதாக இருப்பது நல்லது.
*குர்பானி பிராணியை கொடுப்பவர் அறுப்பது சிறந்தது.
*பிராணியை அறுக்கும்போது ' பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர்
என்று கூறவேண்டும்.
*குர்பானியை ஹஜ்ஜுப் பெருனாள் அன்றும், அதைத் தொடர்ந்து வரும்
மூன்று நாட்களிலும் கொடுக்கலாம்.
*இறைச்சியை இத்தனை பங்குதான் வைக்கவேண்டும்
என்ற எந்த நிபந்தனையும் இல்லை.
*தோலை ஏழை எளியவர்களுக்கு கொடுக்க வேண்டும்.
*குர்பானி பிராணியை கிப்லாவை முன்னோக்கி வைத்துத் தான்
அறுக்க வேண்டுமென்ற கட்டாயம் கிடையாது.
*குர்பானி மாமிசத்தை அண்டை வீட்டு மாற்று மதத்தவர்களுக்கு கொடுப்பதில் தவறில்லை
* தோலை உரித்தவருக்கு கூலியாக கொடுக்கக்கூடாது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக